25 October 2024

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுயிருக்கிறார். இவரது வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியர்.
1.   திக்கிட்டு விழித்தார் மூக்கையா. அவரது நெற்றியிலும் மார்பிலும் வியர்வைத்துளிகள் படர்ந்திருந்தன. கட்டிலுக்கடியில் துழாவி சொம்பை எடுத்து...
அத்வைதாவை அழைத்துக்கொண்டு தன் காரில் ஏறி அந்த வனப்பகுதியிலிருந்து நகரம் நோக்கிச் செல்லும் சாலையில் வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள்...
தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியிலிருக்கும் புதுக்கோட்டையில் செல்வம் டீ ஸ்டாலின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு பின் சீட்டில் உட்கார்ந்திருந்த...
1. போலோ ஸ்போர்ட் பெர்பியூமைத் தேடிக்கொண்டிருந்தான் விக்ரம், அவனது அப்பார்ட்மெண்ட் இருக்கும் பதினெட்டாவது தளத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது....
You cannot copy content of this page