
தகப்பன்சாமி
ததக்கா.. பித்தக்கா நடையோடு, சல்… சல் ஒலி எழும்ப ” தாத்தா……….தாத்தா…..” என்றழைத்த படி நடந்து வந்த குழந்தை அம்மா மலரின் தலையைக் கைகளால் கோதியது.
குவா…குவா…குவா…
“பாரு அதிசயத்த! இவளோ நேரம் அழுகாத குழந்தை உங்களைப் பார்த்ததும் எப்படி அழுகுது பாருங்க முத்துசாமி” என்று அதிசதித்தார் டாக்டர்.
தலையில் அப்பவே குடுமி போடலாம் போல கொள்ளை முடியோடு இருக்கும் தன் மகளைக் கைகளில் ஏந்தி “எனக்கு மகாலட்சுமி பொறந்து இருக்கா” என்று பெருமிதத்தோடு தலையைக் கோதும் கைகள்.
” அப்பா…இன்னைக்கு நடந்த பேச்சுப் போட்டியில் நான்தான் முதல் பரிசு” என்ற மகளின் தலையை அன்போடு கோதும் கைகள்.
” அப்பா… கல்லூரியில் முதல் மதிப்பெண். எனக்கு தங்கப் பதக்கம் கிடைக்கப் போகுது” என்றவள் தலையை ஆனந்தக்கண்ணீரோடு கோதும் கைகள்.
மாலையும் கழுத்துமாய் கணவனோடு ஆசிர்வாதம் வாங்கும் மகளின் தலையைக் கண்மறைக்கும் கண்ணீரோடு கோதும் கைகள்.
பேரனைக் கையில் ஏந்தி, “தங்கமே, என் பேரன் முன்னாடி தரம் இழந்து போயிரும் அத்தனை அழகு “ என்றபடியே மகளின் தலை கோதிய கைகள்.
கண்ணெதிரே காட்சிகள் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தன.
ஊதுவத்தி புகை வீடு எங்கும் நிரம்பி இருக்க, மாலை அணிவிக்கபட்ட புகைப்படச் சட்டத்துக்குள்ளிருந்து நீண்ட முத்துச்சாமியின் கைகள் தலையைக் கோதிய உணர்வு.
“அப்………..பா………” என்ற கதறிய மலரின் தலையைக் கோதியபடி அணைத்துக்கொண்டது குழந்தை.
மேலும் வாசிக்க
முபீன் சாதிகாவின் நான்கு குறுங்கதைகள்
1.துப்பறிதல் அவனும் அவளும் அலைபேசியில் வந்த தவறான இணைப்பின் மூலம் பழக்கமானவர்கள். அலைபேசி வழியாகப் பேசி நட்பை வளர்த்தனர். அவன் உளவுத் துறையில் வேலைப் பார்த்து வந்தான்....
முபீன் சாதிகாவின் இரண்டு குறுங்கதைகள்
1. மறதி யுவனும் புவனும் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்கள். அவர்கள் இருவரையும் விண்வெளிக்கு அனுப்பலாம் என்று முடிவானது. அவர்கள் இருவரும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும்...
உணர்வில்லா உறவுகளின் கீறல்கள்
கன்னக்குழியில் விழுந்தோடும் வியர்வை சரிந்த அழகை கண்ணாடியில் பார்த்து " நா மட்டும் பொண்ணா பொறந்திருந்தா இந்த ஊரே என் அழகுல சொக்கி பின்னால சுத்தும் "...
குயில் தோப்பு
நொய்யல் ஆற்றங்கரையின் ஓரத்தில் நாச்சிவலசு கிராமத்தில் வசித்து வந்தாள் தைலம்மா. மூப்பனுக்கும், வடுகச்சிக்கும் ரோசாப்பூ போல வம்சம் தழைக்க பூத்து நின்ற மகள் தைலம்மா மீது கொள்ளைப்பிரியம்....
பரிசும் தண்டனையும்
“ஏன் சரண், இப்படிப் பாடப் புத்தகமும் படிக்காமல், கதை புத்தகமும் படிக்காமல், அப்படியே ‘ஃப்ரீ ஃபயர்’ ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டும், ‘பி.டி.எஸ்.’ பாடல்களை ‘யூட்யூப்’ மூலமாகக்...
கைபேசி அழைப்பு
மனசு முழுதும் வலியோடு ICU-விற்கு முன் இருந்த வராண்டாவில் படுத்திருந்தேன். என் கூட துணைக்கு படுத்திருந்தான் பால்ய ஸ்நேகிதன் வரதராஜன். இன்றோடு அப்பா அந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்து...
கோதும் கைகள்… நெகிழ்ச்சி.அருமை பூங்கொடி 💐💐💜💙
அருமை.. வாழ்த்துக்கள்.. அப்பாவின் ஞாபகம் வந்தது.. நன்றிகள்