தகப்பன்சாமி


தக்கா.. பித்தக்கா நடையோடு, சல்… சல் ஒலி எழும்ப ” தாத்தா……….தாத்தா…..”  என்றழைத்த படி நடந்து வந்த குழந்தை அம்மா மலரின் தலையைக் கைகளால் கோதியது.

குவா…குவா…குவா…

“பாரு அதிசயத்த! இவளோ நேரம் அழுகாத குழந்தை உங்களைப் பார்த்ததும் எப்படி அழுகுது பாருங்க முத்துசாமி” என்று அதிசதித்தார் டாக்டர்.

தலையில் அப்பவே குடுமி போடலாம் போல கொள்ளை முடியோடு இருக்கும் தன் மகளைக் கைகளில் ஏந்தி  “எனக்கு மகாலட்சுமி பொறந்து இருக்கா” என்று பெருமிதத்தோடு தலையைக் கோதும் கைகள்.

” அப்பா…இன்னைக்கு நடந்த பேச்சுப் போட்டியில் நான்தான் முதல் பரிசு” என்ற  மகளின் தலையை அன்போடு கோதும் கைகள்.

” அப்பா…  கல்லூரியில் முதல் மதிப்பெண். எனக்கு தங்கப் பதக்கம் கிடைக்கப் போகுது” என்றவள் தலையை ஆனந்தக்கண்ணீரோடு கோதும் கைகள்.

மாலையும் கழுத்துமாய் கணவனோடு ஆசிர்வாதம் வாங்கும் மகளின் தலையைக் கண்மறைக்கும் கண்ணீரோடு கோதும் கைகள்.

பேரனைக் கையில் ஏந்தி,  “தங்கமே, என் பேரன் முன்னாடி தரம் இழந்து போயிரும் அத்தனை அழகு “ என்றபடியே மகளின் தலை கோதிய கைகள்.

கண்ணெதிரே காட்சிகள் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தன.

ஊதுவத்தி புகை வீடு எங்கும் நிரம்பி இருக்க, மாலை அணிவிக்கபட்ட புகைப்படச் சட்டத்துக்குள்ளிருந்து நீண்ட முத்துச்சாமியின் கைகள்  தலையைக் கோதிய உணர்வு.

“அப்………..பா………”  என்ற கதறிய மலரின் தலையைக் கோதியபடி அணைத்துக்கொண்டது குழந்தை.

ஆசிரியர்

பூங்கொடி
Subscribe
Notify of

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

கோதும் கைகள்… நெகிழ்ச்சி.அருமை பூங்கொடி 💐💐💜💙

பொன் விஜி
1 year ago

அருமை.. வாழ்த்துக்கள்.. அப்பாவின் ஞாபகம் வந்தது.. நன்றிகள்

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x