27 April 2024

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர். இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர். 2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார். Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார். ‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார். இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை: ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019), கோமாளிகளின் நரகம் (2019), -என மூன்று கவிதைத் தொகுப்புகளும் பனிக் குல்லா (2017), மோகன் (2019), -என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும், திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
-1- முதலிரண்டு மௌனிதா, பால்கனியில் முக்காலியை எடுத்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்தபடி ஏழாவது மாடி உயரத்திலிருந்து கண்ணுக்குச் சிக்கிய போக்குவரத்துச் சாலையை...
கொஞ்சம் முன்னதாக கிளம்பியிருக்கலாமோ என்று ஒருமுறை நினைத்துக்கொண்டான். தொடக்கத்திலிருந்தே பேருந்தில் சக பயணிகள் யாருமே இல்லை என்பது ஒருவிதத்தில்...
You cannot copy content of this page