சுந்தரிக்கு அப்போது ஏழு வயதிருக்கும். செங்கல்லால் கட்டப்பட்டு நிறைவு பெறாமல் இருந்த எங்கள் வீட்டின் பெரிய காம்பவுண்டு சுவரையொட்டி...
சுபி
கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழைய ஜெயங்கொண்டசோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்.ஏ முடித்து விட்டு எம்ஃபில் பட்டபடிப்புகள் நிறைவுச் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு, சென்னையில் வசித்து வருகிறார்.
காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.
இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ்,
கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி, சிற்றுளி ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
கலகம் இணைய இதழ், நடுகல் இணைய இதழ், வாசகசாலை இணைய இதழ், தமிழ்ப்பல்லவி அச்சு இதழ் ஆகியவற்றில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன.
க.சீ. சிவகுமார் நினைவு இயக்கம் நடத்தியதில் இவரது ‘காவன்மரம்’ சிறுகதை பரிசு பெற்றுள்ளது.
‘மாதவிடாய் சிறப்பிதழ்’ மற்றும் ‘ ‘உணவு சிறப்பிதழ்’ கட்டுரைகள் புழுதி இதழில் வெளிவந்தது. ‘காதல் _ ஹார்மோன்களின் விளையாட்டு’ கட்டுரை ஹர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தின் புத்தகத்திலும், ‘பேசாப் பொருளைப் பேசத் துணிவோம்’ கட்டுரை திருச்சி ஆத்மா மனநலை மருத்துவமனை வெளியிடும் மருத்துவ இதழிலும் வெளியாகி உள்ளது.
1. மாலதி அவளுடைய ஆயாவின் கிராமத்து வீட்டில் இறங்கும் போது பளிச்சென்று விடிந்துவிட்டது. விடிய விடிய அழுத பெண்கள்...
இந்தப் பிளாட்பாரத்திற்கு நான் வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு எத்தனையோ புதுக்கடைகள் முளைத்துப் பழைய கடைகளும்...