1.
இலையுதிர் காலம் முன்பே
இந்த இலைகளின் நிழல்கள்
சாவின் தேஜா வூ
2.
சாலையின் பள்ளம்
மழைக்குப் பின்
ஒரு நாய்க்கு பானம் பரிமாறுகிறது
3.
முனகும் காற்று
கவனமற்று வீழும்
மாமர இலைகள்
4.
தூக்கம் கலைந்த நிசி
நெடுந்தூர விடியல்
மின்விசிறியின் சப்தம் மட்டும்
5.
யாரும் செல்லாத பாதை
இப்போது அதில்
இந்த மழையும் நானும் மட்டும்
6.
சூர்யோதயத்தை மறைத்தபடி
இந்த மரக்கிளைகள்
அழகாகவே இருக்கின்றன
7.
தூரத்து வடக்கு நோக்கிச் செல்லும்
குறுகிய சாலை
நிம்பஸ் மேகங்கள் தரையிரங்குகின்றன
8.
சிலந்தி வலையில் சிக்கியிருக்கும்
உதிர்ந்த ஒற்றைப் பவழமல்லி
அதன் அருகில் செல்லும் தேனீ
9.
வாசல் தரையில் உதிர்ந்து கிடக்கும்
நீலப் புலி வண்ணத்துப்பூச்சியின் ஒற்றைச் சிறகு
இன்று கோலமிட மனமில்லை
10.
இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறது அத்திமரக்கிளை
விட்டுச் சென்றது
எந்தப் பறவையோ
எழுதியவர்
- கோவையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி 'மைனஸ் ஒன்', உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2019இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக டிசம்பர் 2012இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்-கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்' எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020இல் வெளியானது. இவரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு 'பாழ் வட்டம்', காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக டிசம்பர் 2021இல் வெளியானது.
இதுவரை.
- சிறுகதை18 January 2024சில ரோமானியக் கடவுளர்களும் நானும்
- கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023ஒரு ‘இத்தாலி’-ய இரவு: ஒரு கதையற்ற கதை எனும் ஒரு எதிர்-கதை
- ஹைக்கூ19 October 2021சாவின் தேஜா வூ
- குறுங்கதை19 October 2021பரிசும் தண்டனையும்