22 October 2024
miruna

ணி முடிந்து வீடு திரும்பும்

இந்த இருள் சூழும் மாலைப் பொழுதில்

நான் மலர்களைக் கனவு காண்கிறேன்

அலைபாயும் நதி வெள்ளத்தில்

அமைதியாக இலைகளை மிதக்க விடுபவளாக

இன்று கொஞ்சம் இருக்க விரும்புகிறேன்

தாமரை இலையில்  சறுக்காடும்

நிலவு ஒளிரும் நீர்த்துளிகளோடு

இந்த இரவு முழுதும் விளையாடவும்

அடர்ந்த சருகுகளில்  புதைந்து  நடக்கவும்

வளர்ந்த வாதாம் மர  இலைகளின்

மாறும் வண்ண நேர்த்தி குறித்து வியப்புறவும்

ஒரு வித குளிர்கால ஏக்கமுறும் வேளை

மெல்ல மழை பிடிக்கத் துவங்குகிறது

ஒரு மறைவான  நிலத்தின்

சிறிய கனவுகள் போல வண்ணக் குடைகள்

சரியும் பாதையில்

மிதந்து செல்ல ஆரம்பிக்கின்றன

மழையின் வலு கூடும் இந்நேரம்

நுண்ணிய விழிகளென விரியும் மழைக்  குமிழ்கள்

திரும்பாமல் போவோரை ஆர்ப்பரித்துக் கூப்பிடுகின்றன

வீடு திரும்ப மனமின்றி களைப்புகள் நீரில்  கரைந்தோட

குமிழ்களோடு உரையாட ஆரம்பிக்கிறேன்

சிரித்து மகிழும் நுரைக்  குமிழ்கள்

இந்நாளைக் கடந்தபடி இருக்கின்றன.

எழுதியவர்

மிருணா
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x