28 April 2024

சித்துராஜ் பொன்ராஜ்

சிங்கப்பூரில் வசிக்கும் சித்துராஜ் பொன்ராஜ் . இதுவரை தமிழில் 'பெர்னுய்லியின் பேய்கள்' (அகநாழிகை, 2016) 'விளம்பர நீளத்தில் ஒரு மரணம்' (காலச்சுவடு, 2018) ஆகிய நாவல்களையும், 'மாறிலிகள்' (அகநாழிகை, 2015), 'ரெமோன் தேவதை ஆகிறான்' (காலச்சுவடு, 2018) ‘கடல் நிச்சயம் திரும்ப வரும்' (வம்சி புக்ஸ், 2019) , ‘அடுத்த வீட்டு நாய் & இன்னபிற அதிசயம்வற்றாத ஆண் பெண் கதைகள்' (உயிர்மை, 2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 'கதைசொல்லியின் ஆயிரம் இரவுகள்' (யாவரும், 2019) என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார். 'காற்றாய்க் கடந்தாய்' (அகநாழிகை, 2015), 'சனிக்கிழமை குதிரைகள்' (பாதரசம், 2017) , ’இரவுகள் பொதுமக்களுக்கானவை அல்ல’ (உயிர்மை, 2023) ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளியிட்டு உள்ளார். உலக மொழிகளிலுள்ள பல இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். 2019ல் இவருடைய 'இத்தாலியனாவது சுலபம்' என்ற கவிதைத் தொகுப்பும், 'மரயானை' நாவலும், 2020ம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுப் போட்டியில் தமிழ்ப் புனைவு மற்றும் கவிதைப் பிரிவுகளில் முறையே முதல் பரிசினையும் தகுதிப் பரிசினையும் வென்றன.
“எங்க ஊருல மழை பெய்யுறதுக்கு முன்னால கொஞ்ச நேரம் பலமா காத்தடிக்கும், இடி மின்னல் எல்லாம் கலாட்டா பண்ணும்....
You cannot copy content of this page