மணிமாலா மதியழகன்
இவர், உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ‘இனிய தமிழ்க் கட்டுரைகள்’ என்ற நூலையும்; முகமூடிகள், இவள், பெருந்தீ, தேத்தண்ணி, ஆழிப்பெருக்கு ஆகிய ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும்; வண்ண வண்ண ஆர்க்கிட், வாலோடு பிறந்தவன், கருப்பு வண்ணப் பூனை, ஒற்றைக் கொம்பு குதிரை ஆகிய நான்கு சிறுவர் பாடல் நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது ‘இவள்’ நூலுக்காக மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசைப் பெற்றார். ‘தேத்தண்ணி’, ‘ஆழிப்பெருக்கு’ நூல்கள் 2022, 2024 ஆண்டுகள் முறையே சிங்கப்பூர் இலக்கியப் பரிசின் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகின.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் முத்தமிழ்விழாச் சிறுகதைப் போட்டிகள், மலேசியாவின் வல்லினம் கலை இலக்கிய இதழின் கட்டுரைப்போட்டி, ரா.கி.ரங்கராஜன் சிறுகதைப்போட்டி, வளர்தமிழ் இயக்கத்தின் தமிழ் வாழ்த்துப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளார்.