
அபாயத்தின் குரல்
நேற்றிரவு நீருக்கடியில் விழுந்திருக்கும் அந்த சிவப்புநிற ஒளியை நான் பார்த்திருக்கத் தேவையில்லை.
சிவப்புநிறம் அபாயத்தை உணர்த்துகிறது
அபாயத்தின் குரல் அதனிடமிருந்து கேட்கிறது .
நீர்க்கரையிலிருந்து காய்ந்த கருவேலமுட்களின் கிளைகளை இழுத்துப்போகிறாள் தூய்மைப்படுத்துபவள்.
இன்று நுங்குகள் வாங்கப் புறப்பட வேண்டும்.
கரையோரம் நிற்கிற பனைமரத்தில்
நுங்குகள் காய்த்திருக்கின்றன
மரநிழல் நீரில் கலங்கல் பாரித்திருக்கிறது
நுங்குகள் வாங்கப் புறப்பட வேண்டும்.
இப்போது
இந்தப் பனைமரத்திலிருந்து யார் எனக்கு நுங்குகள் பறித்துத் தரப்போகிறார்கள்
நீலச் சிறகு பறவை
நிலத்திலிருந்து மின்சாரக் கம்பிக்குப் பறந்து அமர்கிறது
பிறகு நிலத்திலிறங்கி சில நடைகள்
எலுமிச்சை வண்ணப் பட்டுப்பூச்சிகளிரண்டு
மிதிவண்டியின் மிதிகளாகச் சுழன்றுபோகின்றன.
காகம் தோட்டவேலியின் நடுகல்லிலமர்ந்து
ஒருகண் பார்த்தது.
வெளிர்நீல வீட்டிற்குப் பறந்துபோய்
சுற்றுச்சுவரிலமர்கிறது.
காகம் நான்
வெளிர்நீல வீடு
நடுவில் பயனற்று நிற்கும் பனை
அபாயத்தின் குரல்
நீருக்கடியில் மறைந்துபோயிருந்தது.
சிவப்பு அழிந்து
காய்ப்பு நிழல் மிதக்கிறது.
நுங்குகளும் வேண்டாம் .
இந்த வேடிக்கைகளும் வேண்டாம்.
உச்சிவெயிலில் வெளியில் போகக்கூடாதாம்
இதுவே அபாயத்தின் குரல்.

மேலும் வாசிக்க
முன்னிரவு பேச்சு …..
அது ஒரு வயோதிக விடுதி. சுவர்களைக் காலம் அரித்திருந்தது. அதனின் வெடிப்புகள் பழங்காட்சிகளை அசை போட்டபடி தடுமாறிக் கொண்டிருந்தன. ஒரு பெருங்கட்டிடம் தீப்பற்றி எரிதல் போல கூட்டவும்,...
ஒரு முன்னிரவு பேச்சு
ஒரு முன்னிரவு பேச்சு... ஒரு கனைப்பொலியில் உடல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது பேசலாமா? என்பதற்கான சமிக்ஞை என எனக்குப் புரிந்ததால் சற்றே பதட்டத்தோடு எழுந்தேன்....
சாய்வைஷ்ணவி கவிதைகள்
தூரத்தில் மழை பெய்கிறது இடையில் நதி ஓடுகிறது இரண்டிற்கும் ஒரே நிறம்தான் இங்கிருந்துப் பார்த்தால் இரண்டுமே நன்றாகத் தெரியும் சத்தம்கூட கேட்டுக் கொள்ளலாம் குறுக்கே இருக்கும் வேலிக்கம்பிகள்...
கஜகேசரி யோகம்
தொழில் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை சிரமதிசையில் இருப்பதால் மூவாயிரம் ரூபாய் புரட்டிக் கொண்டு பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்க்கச் சென்றேன் எப்பொழுதும் குறித்த நேரத்திற்குச் செல்லும் பழக்கமில்லாத...
கார்குழலி கவிதைகள்
மழையின் ஆயிரம் கைகள் நேற்று பெய்த மழைக்குப் பல்லாயிரம் கைகள். முகத்தில் அறைந்து சென்றது ஒன்று, கதவை ஓங்கி அடித்தது இன்னொன்று, இடியின் ஓசையை நிலத்தில்...
இமையாள் கவிதைகள்
களவு போனவை நமது தூண்டில்களுக்கு இப்போது வேலையில்லை. இந்த அதிகாலையின் சாம்பல் துக்கம் நெஞ்சை ஏதோ செய்கின்றன. நமது உடல்கள் மரத்துப் போய்விட்டன. அன்பின் தீவிரத் தேடல்கள்...
அருமையான கவிதை வாழ்த்துகள்