16 April 2024

லையும் மழையும் ஒன்றாக வாய்த்த கணத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்
நனைத்துக்கொண்டிருக்கும்
நனைந்து கொண்டிருக்கும்
இவ்வுடலையும் மழையையும் விகிதாசாரத்தில் பிரிக்க விரும்பாத மனநிலையில் அமர்ந்திருக்கிறேன்

இம்மலை என் உடலாக நனைந்து கொண்டிருக்கிறது
என் மேடு பள்ளங்கள்
வளைவுகள்
என் மார்பின் கனிந்த பரப்பு
உதட்டின் ஈரங்கள்
விழியின் பசுமை
அடர்ந்த இருட்டின் தொடர்பாகமான
என் கூந்தல்
இவை எல்லாம் நனைக்க வேண்டியவை நனைந்து மணந்தவை

மழை நனைக்கின்ற முதல் உடலாக இருக்கிறது
என் உயிர் வாழும் இவ்வுடல்

மழைக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளாத
இவ்வுடலைத் தான்
மழை தேடி வந்திருக்கிறது
வேண்டி வந்திருக்கிறது
பின்பு எனக்கு ஏற்றபடி என் உடலும்
என் உடலுக்கு ஏற்ற படி இம்மழையும் இலக்கணங்களை எழுதிக் கொண்டன.
இப்போது மழை எனக்கே எனக்கானது மழை மலைக்கானது
மலையும் மழையும் ஒன்றையொன்று அனுமதிக்கின்றன
ஒன்றோடொன்று அனுசரிக்கின்றன.

மழை தூரலாகிறது
சாரலாகிறது
பெருமழையாகிறது
நனைக்கிறது.

மலை நனைகிறது
இணங்குகிறது
சிணுங்குகிறது
துளிர்விடுகிறது
அரும்புகிறது
மலர்கிறது.

மழை இலக்கணத்தோடு வரும்போதெல்லாம்
மலையின் அற்புதத்தை
மழை அறிந்து நோக்கும் போதெல்லாம்
இவ்வுடல் மழைக்காகக் காத்திருக்கிறது நனைய தனது கூந்தலை
அவிழ்த்து விடுகிறது.


சிவ நித்யஸ்ரீ

எழுதியவர்

சிவ நித்யஸ்ரீ
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x